கடன் பெற்றோருக்கு மத்திய வங்கி சலுகை

Date:

கடந்த மாதம் பொது மற்றும் உணவுப் பணவீக்கத்தின் சதவீதக் குறைப்புடன், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 4% முதல் 5% வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகிறார்.

நாணய பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை விவகாரங்கள் தொடர்பான அமைச்சின் ஆலோசனைக் குழு முன்னிலையில் பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மாறுபட்ட வட்டி வீதத்தில் பெறப்பட்ட கடனுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டமையினால் அசெளகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் கலந்துரையாடி உரிய வட்டியை மாத்திரம் செலுத்த முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்த கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட விசாரணையில், மத்திய வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி நாடு திரும்பினார்

மாலைதீவுகளுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...

BYD ATTO 3 கார் இறக்குமதியில் பாரிய வரி மோசடி!

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் இலங்கை சுங்கத்துறையினரால் சுமார் 1100 BYD ATTO...

கொஸ்கொடயில் இளைஞர் சுட்டுக் கொலை

கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (ஜூலை 31) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

சீட் பெல்ட் அணியாவிட்டால் சிக்கல்

வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக...