ஹெரோயின் விற்பனை செய்த மொட்டுக் கட்சி உறுப்பினர் கைது

Date:

உக்குவெல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரும் இரண்டு பெண்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் 2600 மில்லிகிராம் ஹெரோயினும், ஏனைய பெண் சந்தேகநபர்களிடம் இருந்து 2500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்திற்குரிய மொட்டு உறுப்பினர் கடந்த காலங்களில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பதுடன் அவருக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக வழக்கும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர் மாத்தளை – களுதேவல – நரிகந்த பிரதேசத்தில் மறைந்திருந்து இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்டு வருவதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு

சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மற்றும் பாதுகாப்பற்ற...