பொலிஸ் மா அதிபர் விடயத்தில் அரசியல் அமைப்பு பேரவை எடுத்த முடிவு

0
158

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட சேவை நீடிப்பை நான்காவது தடவையாகவும் நிராகரிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

அரசியலமைப்பு பேரவை நேற்று (18) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட கடைசி சேவை நீடிப்புக்கள் இரண்டும் நிராகரிக்கப்படுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

விக்ரமரத்ன 2023 மார்ச் 26 முதல் ஓய்வு பெறவிருந்தார், மேலும் ஜனாதிபதி 4 சந்தர்ப்பங்களில் அவரது சேவையை நீட்டித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here