Wednesday, December 6, 2023

Latest Posts

குழப்படிக்கார எம்பிக்களை வீட்டுக்கு விரட்ட வருகிறது புதிய சட்டம்!

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தமது பதவியின் கௌரவத்தைப் பாதுகாக்காத பட்சத்தில், உறுப்பினர் பதவியை இல்லாதொழிக்கும் ஏற்பாடுகளை உள்ளடக்கி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அது குறித்து கருத்து தெரிவித்த விஜயதாச ராஜபக்ஷ,

“நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு நிறைய விமர்சனங்கள் உள்ளன. நியாயமான விமர்சனம்தான். கடந்த காலங்களில் எம்.பி.க்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றாததால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதேவேளை, அமைச்சரவையில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். தரநிலைகள் சட்டம் புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் முன்வைக்க உள்ளோம். பாராளுமன்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கௌரவம் பாதுகாக்கப்படாவிடின், சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது இழைக்கப்பட்டிருந்தால், சுயாதீனமாக நியமிக்கப்பட்ட குழு அந்த உறுப்பினரை தண்டிக்க வேண்டும். குறிப்பாக, எம்.பி பதவியை ரத்து செய்யும் வகையில் ஏற்பாடுகளை அந்த மசோதாவில் சேர்த்துள்ளோம்” என்றார்.

கண்டி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.