தமிழீழ தேசியக் கொடிநாள் பிரித்தானியாவில் கொண்டாட்டம்

Date:

தமிழீழ தேசியக் கொடிநாள் பிரித்தானியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் மாநகரை மையப்பகுதி Trafalgar square London wc2n 5dn இல் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரித்திானிவாழ் தமிழ் மக்கள் ஒன்றுக்கூடி மாவீரர் வாரத்தை வரவேற்றத்துடன், யுத்தத்தில் உயிர்நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அத்துடன், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச நீதியையும் கோரினர்.

‘தமிழீழ தேசிய கொடி’ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் மாவீரர் வாரத்தின் முதல் நாளில் அங்கீகரிக்கப்பட்டது. அன்றுமுதல் இந்த நாளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரித்தானியாவால் பெருந்தொகையான மக்கள் இந்நிழக்வில் கலந்துகொண்டதுடன், மாவீரர் வாரத்தை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் பல்வேறு நிழக்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

குறித்த நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலக வரலாற்று மையத்துடன் இணைந்து அனேகமான தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வரலாற்று மைய முக்கியஸ்தர்கள், பாலா மாஸ்டர் மற்றும் councillor பரம் நந்தா ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிறுவர்களின் கலாச்சார நடனங்களுடனும் பேச்சுக்களுடனும் நடைபெற்ற நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து நேரலையில் தொடர்பு கொண்டு சிறப்புரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம்

மார்பகப் புற்றுநோயை எதிர்த்து போராடும் இலங்கையின் முதல் தேசிய திட்டம் ஆரம்பித்து...

இந்திய துணை ஜனாதிபதி பதவி பிரமாண நிகழ்வில் செந்தில் தொண்டமான் பங்கேற்றார்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச பொது சேவை குழு (PSI) கூட்டத்தில் கலந்துகொள்ள...