நுவரெலியாவிலுள்ள இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை குத்தகைக்கு வழங்க அனுமதி

Date:

நுவரெலியா குயின் எலிசபெத் அவென்யூவில் அமைந்துள்ள பழைய இலங்கை வங்கி ஓய்வு கட்டிடம் மற்றும் காணியை “Colonial Properties Private Limited” நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு (UDA) சொந்தமான சொத்தை மீண்டும் அபிவிருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்கும் தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து போட்டி முதலீட்டு முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான பேச்சுவார்த்தைக் குழு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது.

அதன்படி, மேற்படி குழுவின் சிபாரிசுக்கு அமைவாக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் மேற்படி சொத்தை Colonial Properties Private Limited நிறுவனத்திற்கு 50 வருட குத்தகை காலத்திற்கு வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 அம்சக் கோரிக்கைகளை இந்திய உப-ஜனாதிபதியிடம் முன்வைக்க மனோ அணி திட்டம்

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களில் எவரும் விரும்புகின்ற பட்சத்தில்,...

முக்கிய கோரிக்கைகளுடன் இந்திய துணை ஜனாதிபதியை சந்திக்க இ.தொ.கா தயார்

இலங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி...

JVPஇல் கோடீஸ்வரர்கள் உருவாகுவது மகிழ்ச்சி

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சியிலிருந்து கோடீஸ்வரர்கள் உருவாகுவது குறித்து தாம்...

நிலக்கரி மோசடிக்கு முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் – SJB

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர்...