டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய பிடியாணை

Date:

நேற்று (நவம்பர் 21) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாதமையே இதற்குக் காரணம்.

தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் 2016ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் டக்ளஸ் தேவானந்தா சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகவில்லை.

அவர் சுகயீனமுற்றுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமையின் பின்னணியிலேயே நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலை வழக்குகளில் சிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் சுட்டு ஐந்து...

2026 முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.1% வளர்ச்சி

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி...

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...