டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய பிடியாணை

Date:

நேற்று (நவம்பர் 21) முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாதமையே இதற்குக் காரணம்.

தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு காசோலைகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் டக்ளஸ் 2016ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான சுப்பிரமணியம் மனோகரனுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் டக்ளஸ் தேவானந்தா சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகவில்லை.

அவர் சுகயீனமுற்றுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் மருத்துவ சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்படாமையின் பின்னணியிலேயே நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் (17) ஒப்பிடுகையில் 20,000 ரூபாவினால் குறைந்துள்ளதாக...

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...