கிருலப்பனையில் தமிழ்ப் பெண் படுகொலை!

Date:

கொழும்பு, கிருலப்பனை, கலிங்க மாவத்தை, கொலோம்தோட்டை சரசவி உயன அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த வயோதிபப் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கமலா சின்னம்மா என்ற 70 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார் என்றும், நேற்றுக் காலை 6.30 மணியளவில் மகள், பேத்தியைப் பாடசாலையில் இறக்கி விட்டு வேலைக்குச் சென்றார் என்றும் தெரியவந்துள்ளது.

காலை 10 மணியளவில் மொரட்டுவை பிரதேசத்துக்கு வியாபார நிமித்தம் செல்வதாகக் கூறி கணவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், கொலையுண்ட வயோதிபப் பெண் மாத்திரமே வீட்டில் தங்கியிருந்தார் என்றும் பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...

முட்டை விலை 70 வரை உயரும்

பேரிடர் காரணமாக கால்நடை பண்ணைகளுக்கு ஏற்பட்ட சேதத்துடன், ஒரு முட்டையின் விலை...