கிருலப்பனையில் தமிழ்ப் பெண் படுகொலை!

Date:

கொழும்பு, கிருலப்பனை, கலிங்க மாவத்தை, கொலோம்தோட்டை சரசவி உயன அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனியாக இருந்த வயோதிபப் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று கிருலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கமலா சின்னம்மா என்ற 70 வயதுடைய வயோதிபப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வீட்டில் இருந்த சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் அந்த வீட்டில் வசித்து வந்தார் என்றும், நேற்றுக் காலை 6.30 மணியளவில் மகள், பேத்தியைப் பாடசாலையில் இறக்கி விட்டு வேலைக்குச் சென்றார் என்றும் தெரியவந்துள்ளது.

காலை 10 மணியளவில் மொரட்டுவை பிரதேசத்துக்கு வியாபார நிமித்தம் செல்வதாகக் கூறி கணவர் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், கொலையுண்ட வயோதிபப் பெண் மாத்திரமே வீட்டில் தங்கியிருந்தார் என்றும் பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தவறான தகவல்களை மறுத்து சம்பத் வங்கி விளக்கம்

Lanka News Web எனும் டிஜிட்டல் செய்தி தளத்தில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளைத்...

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...