பொலிஸ் சித்திரவதையால் இறந்த இளைஞனின் குடும்பத்துக்கு ஈ.சரவணபவன் நேரில்சென்று ஆறுதல்!

Date:

வட்டுக்கோட்டையில் பொலிஸ் சித்திரவதைக்குள்ளாகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் அதில் கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன். இந்த விடயம் தொடர் பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இளைஞரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர் இந்த விடயத்தில் நீதியை நிலை நாட்ட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்பின்னர் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன், இந்த இந்த விடயம் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த அவர் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தொடர்பாக மக்களிடையே எழுந்துள்ள சந்தேகங்கள்,பிரதேச மக்கள் மற்றும் இளைஞனின் குடும்பத்தினரின் ஆதங்கம் என்பவற்றை எடுத்துரைத்தேன்.

இந்தச் சம்பவம் தொடர்பான நீதியான விசாரணைகள் நடைபெறும். முழுமையான மருத்துவ அறிக்கைகளை எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...