ஐஎம்எப் கடன் குறித்து நம்பிக்கை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று அறிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வு முடிந்ததைத் தொடர்ந்து, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வரவு செலவுத் திட்ட ஆதரவு திட்டங்களின் ஊடாகவும் நிதியைப் பெறுவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது என அவர் கூறினார்.

அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உறுதிமொழிகளைப் பெறுவதில் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...