ஐஎம்எப் கடன் குறித்து நம்பிக்கை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று அறிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வு முடிந்ததைத் தொடர்ந்து, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வரவு செலவுத் திட்ட ஆதரவு திட்டங்களின் ஊடாகவும் நிதியைப் பெறுவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது என அவர் கூறினார்.

அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உறுதிமொழிகளைப் பெறுவதில் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்க்கி நியமிப்பு

நேபாளத்தின் இடைக்கால பிரதமராக முன்னாள் பிரதம நீதியரசர் சுஷிலா கார்க்கி நியமிக்கப்பட்டுள்ளதாக...

பெக்கோ சமனின் நெருங்கிய நண்பர் கைது

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தலைவர்களில்...