ஐஎம்எப் கடன் குறித்து நம்பிக்கை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) இரண்டாவது தவணைக்கான ஒப்புதலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை எதிர்பார்க்கிறது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று அறிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆளுநர் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தில் இலங்கை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் மீளாய்வு முடிந்ததைத் தொடர்ந்து, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து வரவு செலவுத் திட்ட ஆதரவு திட்டங்களின் ஊடாகவும் நிதியைப் பெறுவதற்கு இலங்கை எதிர்பார்க்கிறது என அவர் கூறினார்.

அனைத்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உறுதிமொழிகளைப் பெறுவதில் மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...