ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொள்கிறது – ரிச்சர்ட் நட்டல் கவலை!

Date:

தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்போது விமான விமானிகளின் வெளியேற்றத்தை எதிர்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல் தெரிவித்தார்.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போது இந்த விவகாரம் விமான சேவைக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“உங்களுக்குத் தெரியும், நாங்கள் ஒரு அரசு நிறுவனமாக இருப்பதால் விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதில் எங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த நேரத்தில், பல காரணங்களால் விமான விமானிகள் வெளியேறுவதைக் காண்கிறோம்.

பல உலகளாவிய விமான நிறுவனங்கள் விமானிகளைத் தேடுவதாகக் கூறிய அவர், விமான நிறுவனத்திலிருந்து வெளியேறும் விமானிகள் தகுதியான அனுபவமுள்ளவர்கள் என்று கூறினார்.

தற்போது வெளியேறும் விமானிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியத்தை துறைசார் அமைச்சிடம் வலியுறித்தியுள்ளோம்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை நிலக்கரி நிறுவன அலுவலகத்திற்கு பூட்டு

2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி...

அதிகார மோகத்தில் NPP தரப்பு கலவரம்!

மாத்தறை கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரத்தை முறையான தேர்தல் இன்றி கைப்பற்ற...

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...