ஆகாஷுக்கு ஆளுநர் வாழ்த்து

0
32
?????????????????????????????????????????????????????????

இலங்கை 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து மிகச் சிறப்பான பந்துவீச்சுப் பெறுதியை பதிவுச் செய்த யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆகாஷை தொலைபேசியூடாக நேற்று திங்கட்கிழமை தொடர்புகொண்ட ஆளுநர், அவரை வாழ்த்தியதுடன் எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் எனவும், தொடர்ந்து சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆகாஷிடம் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆட்டத்தில் விளையாடிய ஆகாஷ், 5 இலக்குகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here