Saturday, July 27, 2024

Latest Posts

டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் ; வழக்கை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, டயானா கமகே மற்றும் வழக்கின் ஏனைய பிரதிவாதிகளை டிசம்பர் 12 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், அவரது குடியுரிமை தொடர்பான உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த வழக்கை டிசம்பர் 12, 2022 அன்று திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது.

இராஜாங்க அமைச்சரின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் உண்மைத்தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் முறைப்பாடு தொடர்பில் நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் முதலில் தடை செய்யப்பட்டன.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.