மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு : காலநிலையால் மக்கள் அசௌகரியம்!

Date:

தற்போது நிலவும் காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பெறப்படும் மரக்கறிகளின் அளவு 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்காரணமாக, மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பலத்த மழையுடன் கூடிய வானிலை காரணமாக குறித்த வர்த்தக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் தரமான மரக்கறிகள் விற்பனை செய்யப்படாமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் ஐ.ஜி.விஜேனந்த தெரிவித்தார்.

அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வெளி மாகாணங்களில் இருந்து வரும் மரக்கறிகள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து வரும் மரக்கறிகளின் அளவு வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மழை காரணமாக மரக்கறி விளைச்சல்கள் சேதமடைந்துள்ளதால் இந்நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட் மற்றும் லீக்ஸ் கிலோ ஒன்றின் தொகை விலை 100 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

பொகவந்தலாவ பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். ...

ஜனாதிபதி அனுரவுக்கு மனோ அனுப்பிய எச்சரிக்கையுடன் கூடிய அவசர கடிதம்

2018ம் வருட 32ம் இலக்க சட்டத்தின் மூலம் நாம் எமது நல்லாட்சி...

நிமல் லான்சாவுக்கு பிணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சாவுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில்...

தம்மிக்க பெரேராவின் மேலும் ஒரு வியாபார விருத்தி

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான தம்மிக்க பெரேரா, தனது வணிக வலையமைப்பில்...