மத்திய வங்கி ஆளுநர் பெரும்பான்மை நம்பிக்கையினரின் வென்றார்!

Date:

இரண்டாவது இடத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிடித்துள்ளார் மற்றும் அவரது நம்பிக்கை 44.5 சதவீதமாகும்.

மேலும், சந்தர்ப்பம் கிடைத்தால், 56.8 வீதமான இலங்கையர்கள் வேறு நாட்டிற்கு இடம்பெயர விரும்புவதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 18-29 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, 18-29 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர்களில் 77.2 வீதமானவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் வேறு நாட்டிற்கு இடம்பெயரத் தயாராக இருப்பார்கள், அதேவேளை 30 வயதுக்கு மேற்பட்ட இலங்கையர்களில் 45.4 வீதமானவர்கள் வேறு நாட்டிற்கு இடம்பெயரத் தயாராக உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த அறிக்கையின்படி, 60.5 சதவீதமான இலங்கையர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முடிவை அங்கீகரித்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் 18-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்.

மேலும் இந்த அறிக்கையின் படி இலங்கையில் 79.1 வீதமானவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த பொருளாதார நிலைமையை விட தற்போதைய பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பு அக்டோபர் 21 முதல் 31 வரை நடத்தப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிதி அமைச்சின் உதவி இயக்குநர் தற்கொலை

இலங்கை நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் (ERD) உதவி இயக்குநராகப்...

இலங்கையின் கடன் சுமை பாரிய அளவில் அதிகரிப்பு

ரூபாய் மதிப்பு சரிவடைந்ததன் விளைவாக நாட்டின் கடன் சுமை ரூபாய் 1.1...

ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரசு நிதியை தவறாக பயன்படுத்தி லண்டன் நோக்கி தனிப்பட்ட பயணம் மேற்கொண்டதாக...

கட்சியில் இருந்து முழுமையாக விலகுமாறு எரானிடம் SJB கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...