வெங்காயம் உருளைக்கிழங்கு விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வைத் தடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், உள்ளூர் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பொருள் வரியை ரூ.60 ஆகவும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான சிறப்புப் பொருள் வரியை ரூ.30 ஆகவும் அரசாங்கம் திருத்தியது.

இதன்படி, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, உரிய காலக்கெடு முடிவடைந்த பின்னர், இது தொடர்பான வர்த்தகப் பண்ட ஒட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விசேட வர்த்தக விலை 30 ரூபாவை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குறித்த வரித் திருத்தம் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....