வெங்காயம் உருளைக்கிழங்கு விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை உயர்வைத் தடுப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான விசேட வர்த்தக வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், உள்ளூர் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளைக்கிழங்குக்கான சிறப்புப் பொருள் வரியை ரூ.60 ஆகவும், இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான சிறப்புப் பொருள் வரியை ரூ.30 ஆகவும் அரசாங்கம் திருத்தியது.

இதன்படி, விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, உரிய காலக்கெடு முடிவடைந்த பின்னர், இது தொடர்பான வர்த்தகப் பண்ட ஒட்டு ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் நவம்பர் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விசேட வர்த்தக விலை 30 ரூபாவை 10 ரூபாவாக குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குறித்த வரித் திருத்தம் டிசம்பர் 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...