யாழில் சிறப்பு பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள்

Date:

க.பொ.த சாதரணப் பரீட்சையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் அதிகூடிய சிறப்பு பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் இருந்து க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றிய 270 மாணவிகளில் 115 மாணவிகள் 9 பாடத்திலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ள அதேநேரம் 59 மாணவிகள் 8 பாடங்களிலும், 22 மாணவிகள் 7 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளனர்.

இதேபோன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 271 மாணவர்கள் தோற்றியதில் 74 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளதோடு 73 மாணவர்கள் 8 பாடங்களிலும், 28 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்ற அதே நேரம் 19 மாணவர்கள் 6 பாடங்களில் ஏ தரச் சித்தியினைப் பெற்று சாதணை புரிந்துள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் 17 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தி எய்தியுள்ளதோடு 24 மாணவர்கள் 8 பாடங்களிலும், 24 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ தரச் சித்தியினையும் 19 மாணவர்கள் 6 பாடங்களில் ஏ தரச் சித்தியினை பெற்றுள்ளனர்.

இதேநேரம் மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளில் 9 மாணவிகள் 9 பாடங்களிலும், 6 மாணவிகள் 8 பாடங்களிலும், 6 மாணவிகள் 7 பாடங்களிலும், 5 மாணவிகள் 6 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...