யாழில் சிறப்பு பெறுபேறுகள் பெற்ற மாணவர்கள்

Date:

க.பொ.த சாதரணப் பரீட்சையில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவர்கள் அதிகூடிய சிறப்பு பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுவரை கிடைத்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் இருந்து க.பொ.த சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றிய 270 மாணவிகளில் 115 மாணவிகள் 9 பாடத்திலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ள அதேநேரம் 59 மாணவிகள் 8 பாடங்களிலும், 22 மாணவிகள் 7 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளனர்.

இதேபோன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 271 மாணவர்கள் தோற்றியதில் 74 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளதோடு 73 மாணவர்கள் 8 பாடங்களிலும், 28 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ தரச் சித்தியினைப் பெற்ற அதே நேரம் 19 மாணவர்கள் 6 பாடங்களில் ஏ தரச் சித்தியினைப் பெற்று சாதணை புரிந்துள்ளனர்.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் 17 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்தி எய்தியுள்ளதோடு 24 மாணவர்கள் 8 பாடங்களிலும், 24 மாணவர்கள் 7 பாடங்களில் ஏ தரச் சித்தியினையும் 19 மாணவர்கள் 6 பாடங்களில் ஏ தரச் சித்தியினை பெற்றுள்ளனர்.

இதேநேரம் மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவிகளில் 9 மாணவிகள் 9 பாடங்களிலும், 6 மாணவிகள் 8 பாடங்களிலும், 6 மாணவிகள் 7 பாடங்களிலும், 5 மாணவிகள் 6 பாடங்களிலும் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....

யார் என்ன சொன்னாலும் கொள்கை முடிவில் மாற்றம் இல்லை – லால்காந்த

ஒவ்வொரு முறையும் பொருத்தமான வழிமுறையின்படி எரிபொருள் விலைகள் குறைக்கப்படுகின்றன அல்லது அதிகரிக்கப்படுகின்றன...

எஸ்.எம் சந்திரசேன கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்துள்ளப்பட்டுள்ளார். இன்று (04) முற்பகல் இலஞ்ச...

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...