துன்பங்களை அனுபவித்து பெற்ற அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்கப்பட மாட்டாது

0
117

பெரும் துன்பங்களை அனுபவித்து பெற்ற இந்த அரசாங்கத்தை கவிழ்க்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

“மோசடி மற்றும் ஊழலை நிறுத்துவோம், நிச்சயமாக நாட்டை ஒரு இடத்திற்கு கொண்டு வருவோம். இனியும் எமது பிள்ளைகள் பாதிக்கப்படாத நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காகத்தான் நிச்சயமாக இந்த நாட்டைக் கட்டியெழுப்புகிறோம். இந்த அரசாங்கத்தை மீண்டும் கவிழ்க்க அனுமதிக்க மாட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். 3% முதல் விட்டுக் கொடுக்காத அரசு, பல இன்னல்களை அனுபவித்து விட்டுக் கொடுக்கும் என்று நினைக்கிறீர்களா? இது போகாது…”

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here