புலமை பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளின் 3 கேள்விகள் முன்கூட்டியே கசிந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த 3 வினாக்களுக்குமான முழுமையான புள்ளிகளை பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (02) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வினாத்தாளுக்கான தேர்வை மீண்டும் நடத்துவதால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் எனவும் பரீட்சையை மீண்டும் நடத்துவது பொருத்தமானதல்ல என அமைச்சரவை பரிந்துரைத்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்ட விதத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று மீள அழைக்கப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தக் கோரி, சட்டமா அதிபர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அதன்பின், மனு மீதான விசாரணையை டிசம்பர் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...