அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும், முறையான பணி ஒழுங்கு இல்லாவிட்டால், ஆறு மாதங்கள் செல்வதற்கு முன்னர் மக்கள் வீடுகளை முற்றுகையிடுவார்கள் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘நினைவில் கொள்ளுங்கள், எங்களுக்கு சரியான வேலைத் திட்டம் இருக்க வேண்டும். இல்லையெனில் நாங்கள் வெற்றி பெற்ற 6 மாதத்தில் மக்கள் எங்கள் வீடுகளுக்கு வருவார்கள். நான் இதற்கு முன் கூறிய விடயங்கள் கடந்த காலத்தில் அப்படியே நடந்துள்ளது” என்றார்.