மலையக மக்களின்‌ பிரச்சினைக்கு நிச்சயம்‌ நிரந்தர தீர்வு வழங்கப்படும்‌ – பதுளை மாவட்ட பா.உ அம்பிகாவின் கன்னி உரை

Date:

மலையக மக்களின்‌ வீடு, காணி மற்றும்‌ சம்பளப்‌ பிரச்சினைக்கு தேசிய மக்கள்‌ சக்தி ஆட்சியில்‌ நிச்சயம்‌ நிரந்தர தீர்வு வழங்கப்படும்‌ என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்‌ அம்பிகா சாமுவேல்‌ தெரிவித்தார்‌.

நாடாளுமன்றத்தில்‌ இன்று (04) உரையாற்றுகையிலேயே அவர்‌ இவ்வாறு கூறினார்‌.

மலையக மக்களின்‌ பிரதிநிதியாக தன்னை நாடாளுமன்றம்‌ அனுப்பிவைத்த மக்களுக்கும்‌, தனக்கு வாய்ப்பளித்த தேசிய மக்கள்‌ சக்திக்கும்‌ அவர்‌ நன்றிகளைத்‌ தெரிவித்தார்‌.

மலையக பெருந்தோட்டத்‌ தொழிலாளர்கள்‌ தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ளனர்‌ எனவும்‌, நிரந்தர தீர்வுகளுக்கு பதிலாக அவர்களுக்கு தற்காலிக தீர்வுகளே வழங்கப்பட்டுள்ளன எனவும்‌, நிரந்தர தீர்வுகளை காண்பதே தனது நோக்கம்‌ எனவும்‌ தனது 1ஆவது நாடாளுமன்ற உரையில்‌ அம்பிகா
விவரித்தார்‌.

மலையகத்‌ தமிழர்கள்‌ என்ற அடையாளத்துடன்‌ இலங்கையர்‌ என்ற ரீதியில்‌ எமது மக்கள்‌ தேசிய நீரோட்டத்தில்‌ இணைக்கப்பட்டு கல்வி ,விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும்‌ எமது சமூகமும்‌ பிரகாசிக்க வேண்டும்‌. இதற்குரிய வாய்ப்பை தேசிய மக்கள்‌ சக்தி பெற்றுக்கொடுக்கும்‌.

அதேபோல கல்வி, சுகாதாரம்‌ போன்ற பிரச்சனைகளுக்கும்‌ உரிய தீர்வு வழங்கப்படும்‌ எனவும்‌ அம்பிகா மேலும்‌ குறிப்பிட்டுள்ளார்‌. ஹட்டன்‌ பிரகடனத்தில்‌ சில தீர்வு முன்மொழிவுகள்‌ முன்வைக்கப்பட்டுள்ளன எனவும்‌ அம்பிகா சுட்டிக்காட்டினார்‌.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

BYD ATTO 1 தொடர்பிலும் சிக்கல்

ஜான் கீல்ஸ் CG ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் BYD ATTO...

மஹிந்தவின் சொத்து விபரம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது சொத்துகள் மற்றும் கடன்கள் தொடர்பான...

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...