வடக்கில் புலம்பெயர் மக்களின் காணிகள் அபகரிப்பு

Date:

யுத்த சூழலில் வவுனியா மாவட்டத்திலிருந்து புலம்பெயர் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

வவுனியா ஓமந்தை மற்றும் பன்றிக்கெய்தகுளம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்தது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த காணிகளை அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் அபரித்துகொண்டு, பிரிதொரு தரப்பினருக்கு வழங்கப்படுவதாகவும் குறித்த பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த காணிகள் நீண்ட காலமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் உறவுகளினால் பராமரிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் உள்ளுர் வாசிகளார் காணிகளை பராமரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே அரசியல் பின்புலம் கொண்ட சிலர் அடாவடித்தனமாக காணிகளை சுபீகரித்துக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பிரதேச செயலகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படவேண்டும் எனவும், இல்லையேல் இது மீண்டும் சமூக விரிசலுக்கு ஏதுவான காரணியாக மாறுவதோடு, சமூக பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என பிரேதச மக்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....