இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்லும் காற்றின் மாசு அளவு வேகமாக குறைந்து வருவதால் இலங்கையில் நிலவும் வளிமண்டல மாசு படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய காற்றின் தர அறிக்கையை இன்று காலை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளதுள்ளதுடன் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்தமையால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக காணப்பட்ட மூடுபனி அல்லது மூடுபனி நிலைமைகள் இந்தியாவில் இருந்து வீசும் பலத்த காற்று மூலம் இலங்கையின் வான்வெளியை மாசுபடுத்தும் துகள்களின் வருகையின் விளைவாகும்.
தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது சூறாவளி புயலாக “மண்டூஸ்” ஆக குவிந்துள்ளதால், இலங்கையின் சில பகுதிகள் பலத்த காற்று மற்றும் இடையிடையே மழைப்பொழிவும் இடம்பெற்று வருகிறது எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
புது தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிர் எச்சங்களை எரித்தமை இந்திய தலைநகரில் காற்று மாசுபாட்டின் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடித்ததும் நிலைமையை மோசமாக்கியதாக கூறப்படுகிறது.
காற்றின் தரக் குறியீடு (AQI) படி, கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (டிச.08) காற்றின் தரம் 249 ஆக பதிவாகியுள்ளது. குருநாகலில் 291, யாழ்ப்பாணத்தில் 280, வவுனியாவில் 251, கண்டியில் 214 ஆக இருந்தது.
குறைந்த காற்றின் தரம் காரணமாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் மற்றும் ஒவ்வாமைகளால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட நேரம் வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஈப்பட்டுள்ளதாகவும் படிப்படியாகி காற்று மாசுபாடு குறைந்து வருவதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
n.s