DP கல்வித் திட்டத்தின் மேலும் ஒரு மகத்தான வெற்றி

Date:

க.பொ.த சா/த தேர்வில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்தில் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் 16% அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடத்திற்கு தோற்றிய மாணவர்களில், A சித்திகளின் சதவீதம் 24% ஆகும்.

ஆனால் 2021 இல், அந்த சதவீதம் 40% ஆக உயர்ந்துள்ளது, இது ஒரு தனித்துவமான சூழ்நிலை.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பம் தொடர்பான இந்த தனித்துவமான எழுச்சிக்குக் காரணம், டிபி கல்வித் திட்டம் நாட்டின் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய தனித்துவமான கல்வி வாய்ப்புதான் என்பது மறுக்க முடியாத உண்மை.

தம்மிக்க பெரேராவின் கருத்தின்படி, DP கல்வித் திட்டத்துடன் இணைந்து நடத்தப்படும் Dhammika and Priscilla Perera அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும் சமூகப் பணியான DP கல்வியில் தற்போது அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வேளையிலும், நாட்டின் மக்கள் வாழ்க்கையே குழப்பமான நிலையில், நாடு பல சாதனைகளை இழந்து வரும் நிலையில், நாட்டின் குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்கு DP கல்வித் திட்டத்தின் முக்கிய பங்களிப்பை நாங்கள் உணர்கிறோம். இது கல்வித்துறையில் அனைவராலும் பாராட்டப்பட வேண்டும்.

இது தொடர்பில், தம்மிக்க பெரேரா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...