தட்டுப்பாடு இல்லாமல் சந்தைக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி

Date:

முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை விலை 35 முதல் 36 ரூபாய் வரை விற்பனையாகிறது.

எவ்வாறாயினும், நாட்டின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப முட்டையின் விலை தீர்மானிக்கப்படுவதால், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் தேவை அதிகரிக்கலாம் எனவும் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முட்டை ஒன்றின் சில்லறை விலை 45 ரூபாவிற்கும் குறைவாகவே தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அரிசி மற்றும் சோளத்தின் விலை உயர்வினால் முட்டை ஒன்றின் உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழி இறைச்சி உற்பத்தி உபரியாக இருப்பதால், கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஜிக் குணசேகர தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் இலங்கை வருகிறார்

வத்திக்கான்  வெளியுறவு அமைச்சர் பேராயர் பால் ரிச்சர்ட் கல்லாகர்  எதிர்வரும் நவம்பர்...

பத்மேவுடன் தொடர்பு – ஐந்து நடிகைகளுக்கு சிக்கல்

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரான கெஹெல்பததர பத்மே உடன் வெளிநாடுகளுக்குச்...

இலங்கை பெண்கள் நால்வர் சடலங்களாக மீட்பு

சென்னை எண்ணூர் பெரிய குப்பம் கடற்கரையில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை...

எரிபொருள் விலை மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (31) நள்ளிரவு 12.00...