சீன வேலைத்திட்டங்களில் இலங்கையருக்கு முன்னுரிமை

Date:

நாட்டில் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சீன அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிகளவில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவின் Belt and Road திட்டத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்ட குறித்த திட்டமானது கட்டுமானம், போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தத் திட்டங்கள் ஒருபுறம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்ற போதிலும், மறுபுறம் இதில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் இறுக்கமான விதிமுறைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கைத் தொழிலாளர்கள் சீனத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான ஊதியத்தை பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், குறைந்தளவான சலுகைகளை அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பணியிடங்களில் முதன்மை மொழியாக சீன மொழி பயன்படுத்தப்படுவதன் காரணமாக இலங்கைத் தொழிலாளர்கள் தகவல் தொடர்பாடலில் தடையினை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு பல தவறான புரிதல்கள் மற்றும் பிரச்சினைகள் எழுவதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதம்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேலும் பல ரகசியங்கள் கசிவு

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலானது ஒரு...

NDB ஊழல், கைதானவர் விளக்கமறியலில்

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) தரவு அமைப்பிற்குச் சட்டவிரோதமாக ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...