சீன வேலைத்திட்டங்களில் இலங்கையருக்கு முன்னுரிமை

Date:

நாட்டில் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சீன அபிவிருத்தித் திட்டங்களில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு அதிகளவில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.

சீனாவின் Belt and Road திட்டத்தின் ஊடாக நிதியளிக்கப்பட்ட குறித்த திட்டமானது கட்டுமானம், போக்குவரத்து மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது.

இந்தத் திட்டங்கள் ஒருபுறம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கின்ற போதிலும், மறுபுறம் இதில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் இறுக்கமான விதிமுறைகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கைத் தொழிலாளர்கள் சீனத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான ஊதியத்தை பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன், குறைந்தளவான சலுகைகளை அனுபவிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பணியிடங்களில் முதன்மை மொழியாக சீன மொழி பயன்படுத்தப்படுவதன் காரணமாக இலங்கைத் தொழிலாளர்கள் தகவல் தொடர்பாடலில் தடையினை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்த நிலையில், தொழிலாளர்களுக்கு பல தவறான புரிதல்கள் மற்றும் பிரச்சினைகள் எழுவதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...