இரத்மலானை, மத்தள, பலாலி விமான நிலையங்கள் மூலம் 26 பில்லியன் இலாபம்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான வேலைத்திட்டத்தினால் நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன், இலங்கையின் விமான சேவைத்துறையும் பாரிய முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்மலானை, மத்தள, பலாலி ஆகிய மூன்று விமான நிலையங்களின் மூலம் விமான நிலையமும் விமான நிறுவனமும் 26 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது.

மத்தள விமான நிலையத்தின் நட்டத்தை சுமார் 25 வீதத்தால் குறைத்து வருமானம் ஈட்ட முடிந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இம்மாதம் இதுவரையில் 66 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 5 வருடங்களில் 50 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் இலக்கை அடைய சுற்றுலா அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அனைவரும் ஒரே பாதையில் ஸ்திரமான நாட்டை நோக்கி பயணிக்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...