சர்ச்சைக்குரிய மிக் ஒப்பந்தம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மற்றும் எயார்பஸ் ஒப்பந்தத்தில் இலஞ்சம் பெற்றமை உறுதிப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்துள்ளது.
அதன்படி, அவர்கள் இருவரும் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் அதாவது மனைவி மற்றும் குழந்தைகளும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.