தேசியப் பட்டியல் பிரச்சினைநிறைவுக்கு வந்துவிட்டதாம்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பான பெயர் விபரங்களைக் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விரைவில் வெளியிடுவார் எனவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.மக்கள் சக்திக்குக் கிடைக்கப் பெற்ற ஐந்து தேசியப் பட்டியல் ஆசனங்களில் நான்கு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.

தேசியப் பட்டியல் வாய்ப்பைத் தோல்வி அடைந்த உறுப்பினர்களும், பங்காளிக் கட்சி உறுப்பினர்களும் கோருவதால் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுவிட்டதா என எழுப்பப்பட்ட கேள்விக்கே,

“பிரச்சினை தீர்ந்துவிட்டது, பெயர் விபரத்தை மட்டுமே அறிவிக்க வேண்டியுள்ளது. அதனைக் கட்சித் தலைவர் அறிவிப்பார்.” – என்றும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்குச் சாதகமான பெறுபேறு கிட்டும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நேபாள போராட்டக் குழுவிடம் இருந்து பல உயிர்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானின் வீர தீர செயல்! 

அண்மையில் நேபாளத்தில் இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் போராட்டம் காரணமாக அங்கு பல...

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...