எதிர்பார்க்கப்பட்ட லங்கா பிரீமியர் லீக் (LPL) 2022 டிசம்பர் 6, 2022 அன்று தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் இத்தொடர் நடைபெறவிருந்த நிலையில் பொருளாதார மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் நாட்டின் நிலைமைகள் முன்னேற்றமடைந்துள்ள நிலையில்,LPL தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
LPL இன் உத்தியோகபூர்வ ஊக்குவிப்பாளரான IPG ஸ்போர்ட்ஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனில் மோகன், “LPL 2022 இலிருந்து இலங்கைக்கு அதிகபட்ச வெளிப்பாடு மற்றும் பொருளாதாரத்தில் அதிகபட்ச நேர்மறையான தாக்கத்தை நாங்கள் விரும்புகிறோம். இலங்கைக்கான சுற்றுலாவை அதிகரிக்கவும் லீக் உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்தொடர் எதிர்பார்க்கப்படும் அனைத்து உற்சாகத்தையும் வழங்கும் மற்றும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ரசிகர்களின் பரந்த பங்கேற்பை அனுபவிக்கும் ஒரு சிறந்த LPL போட்டியை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, LPL லீக் தொடர் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் என்றும், நாட்டின் இயற்கை அழகை ரசிக்க மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
N.S