கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இன்று (டிசம்பர் 12) முதல் டிசம்பர் 18 ஆம் திகதி வரை கோழிக்கடைகள் தவிர்ந்த அனைத்து இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்படும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர்களுக்கு அவர் விடுத்துள்ள கடிதத்தில், கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக கால்நடைகள் பல உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கும், கால்நடைகளை வெட்டுவதற்கும், இறைச்சி கடைகளில் விற்பனை செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு அனைத்து இறைச்சிக் கூடங்களையும் இறைச்சிக் கடைகளையும் தற்காலிகமாக மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஆளுநரின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.
N.S