கொழும்பில் பிரபல வர்த்தகர் கடத்திக் கொலை!

0
59

இனந்தெரியாத குழுவினரால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் பொரளை மயானத்திற்கு அருகில் காரில் விட்டுச் சென்ற ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார்.

தினேஷ் ஷாப்டர் கடந்த 14ஆம் திகதி பிற்பகல் கொழும்பு மல்பாறையில் உள்ள தனது வீட்டில் கடன் கொடுத்தவரைச் சந்திக்கப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

எனினும் சிறிது நேரத்தில் அவரது தொலைபேசி நிறுத்தப்பட்டதுடன், தொலைபேசியில் இருந்து கிடைத்த சமிக்ஞைகளின் பிரகாரம் அவர் பொரளை மயானத்திற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, சந்தேகமடைந்த மனைவி, அந்த நிறுவன அதிகாரியை அந்த இடத்திற்கு அனுப்பி சோதனையிட்டார், அங்கு தினேஷ் ஷாஃப்டர் தனது காருக்குள் கைகள் கட்டப்பட்டு கழுத்தில் பிளாஸ்டிக் பேண்டால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருந்த அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தினேஷ் ஷாஃப்டர் இறக்கும் போது அவருக்கு வயது 51.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here