மத்திய மாகாண பாடசாலைகள் குறித்து கூடுதல் கவனம்

0
176

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வானிலை காரணமாக நிலச்சரிவு அபாயத்தில் உள்ள மத்திய மாகாண பாடசாலைகளை சிறப்பு ஆய்வுக்கு உட்படுத்த தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, பாடசாலை வளாகங்களில் நிலச்சரிவு அபாய ஆய்வுகள் 9 ஆம் திகதி தொடங்கி, மொரட்டுவ மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிகள் அடங்கிய 15 நிபுணர் குழுக்களின் தலைமையில் நடத்தப்படுகின்றன.

கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள பாடசாலை வளாகங்களின் நிலைமை அவசரமாக மதிப்பிடப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here