யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் மாயம்!

Date:


யாழ்., பலாலி வடக்கு, அன்ரனிபுரத்திலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற மீனவர் இன்னமும் கரை திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 வயதுடைய இராயப்பு றொபேட் கெனடி என்ற மீனவரே காணாமல்போயுள்ளார் என்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலிட்டித் துறைமுகத்திலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவில், காணாமல்போனதாகக் கூறப்படும் மீனவரின் படகு கவிழ்ந்திருந்த நிலையில் கடற்றொழிலாளர்கள் மீட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் மீனவர் காணாமல்போன நிலையில், அவர் பணித்த படகு நேற்று மீட்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...