எட்கா ஒப்பந்தம் தொடர்பான அரசின் நிலைப்பாடு

Date:

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை அல்லது எட்கா உடன்படிக்கையில் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை அல்லது அது எந்த காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பல தசாப்தங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை புதுப்பிப்பதற்கான நம்பிக்கை இருப்பதாக அவர் கூறினார்.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது பல்வேறு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இரு நாடுகளுக்கு இடையே முன்பு ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி நாங்கள் செயல்படுகிறோம். அதை புதுப்பிக்க வேண்டிய தேவையும் உள்ளது. பல தசாப்தங்களுக்கு முன்னர் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை சந்தை விரிவாக்கத்துடன் புதுப்பித்து முன்னேற்றுவோம் என்று நம்புகிறோம்.

மேலும் எட்கா தொடர்பான விவாதத்தை தொடருங்கள் இல்லையேல் இந்திய விஜயத்தின் பின்னர் எட்கா ஒப்பந்தம் அமுல்படுத்தப்படும்… அது எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம். நாங்கள் எந்த நேரத்திலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கத் தயாராக இருக்கிறோம் என்பதுதான் எங்களது அடிப்படைக் கொள்கை..”

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...

இலங்கை சுங்கத்துறை வசூல் சாதனை

இலங்கை சுங்கத்துறை நேற்று (06) ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு...

குடு விற்பனை செய்யும் NPP அரசாங்க தரப்பு

நாட்டில் போதைப்பொருள் தொற்றுநோயை ஒழிக்க அரசாங்கம் கட்சி சார்பற்ற முறையில் செயல்படுவதை...