தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்காக வேட்புமனுக்களை மீள அழைப்பது பொருத்தமானதாக இருக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரரை தரிசனம் செய்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடாத்துவதற்கு வேட்புமனுக்கள் அழைக்கப்பட்டன. ஆனால் அன்று இருந்த கட்சிகள் இன்று இல்லை. சில கூட்டணிகள் உடைந்துள்ளன. எனவே அந்த வேட்புமனுக்களை ரத்து செய்துவிட்டு புதிய வேட்புமனுக்களை அழைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே, கடந்த தினம் அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றை பெற்று, வேட்புமனுக்களை ரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை தயாரித்துள்ளோம். இது ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, மீண்டும் வேட்புமனுக்களை அழைத்து, உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு சித்திரை புத்தாண்டிற்கு முன்னர் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

அதேபோல், மாகாண சபை தேர்தலும் அடுத்த வருடத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்க தயாராகும் சஜித்!

அரசாங்கம் ஏதேனும் வகையில் மின் கட்டணத்தை அதிகரித்தால், வீதியில் இறங்கி அதற்கு...

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை தெற்கு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, மோட்டார் சைக்கிளில் வந்த...

முட்டை விலை குறைப்பு

பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை நிறுத்தும் நோக்கில் முட்டையின் விலையை...

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு இந்த மாதம் 14...