Thursday, May 15, 2025

Latest Posts

திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நாணயத்தில் கடன் வாங்குவதற்கும் பத்திரங்களை வெளியிடுவதற்கும் திறைசேரி செயலாளருக்கு அதிகாரம் வழங்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்க பொதுக் கடன் முகாமைத்துவ சட்டத்தின் 32 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கை அரசாங்கத்தால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான ஒப்பந்தங்களுக்கான கையொப்பங்கள், ஒரு பொது நிறுவனம் அல்லது பொது நிறுவனத்திற்கு வெளிநாட்டுக் கடனைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் மற்றும் எந்தவொரு ஒப்பந்தம், பத்திரம், உறுதிமொழிக் குறிப்பு அல்லது அதற்குத் தேவையான பிற ஆவணங்கள் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் உடன்படிக்கை அல்லது உத்தரவாதத்தை ஜனாதிபதி திறைசேரி செயலாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.