இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கத்தின் திருமண பரிசு

0
179

புதிதாக திருமண பந்தத்தில் இணையும், குறைந்த வருமானத்தை கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2000 காணிகளை முதற்கட்டமாக வழங்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை, குறைந்த வருமானம் பெறும் இளைஞர், யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.டி.ரணவக்க தெரிவிக்கின்றார்;.

காணிகளை இலவசமாக பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here