ஆளுநரின் சாதனை திட்டத்துடன் கிழக்கில் கலை கட்டிய கிறிஸ்துமஸ்!

0
187

கிழக்கு மாகாண வரலாற்றில் மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேலால் திறந்து வைக்கப்பட்டது.

டச்பே (DUCHBAY) கடற்கரையில் இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 24ஆம் திகதி இரவு இடம்பெற்ற விசேட சமய ஆராதனை நிகழ்வுகளில் கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டிருந்தார்.

டச்பே (DUCHBAY) கடற்கரையில் அமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தை காண அலை அலையாக மக்கள் திரள்வதுடன் அதற்கு முன்னிலையில் இதுவரை 10ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here