களத்தில் இறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி

Date:

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டத் தொடரை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடாத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

கட்சியின் உயர்பீடக் குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பிரதிநிதிகள் அடுத்த மாதம் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய அமைப்பாளர் மற்றும் வாக்களிப்பு முகவர் நியமனத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கி பண்டார ஜனாதிபதிக்கு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஆறு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தெஹிவளையில் ஒருவர் சுட்டுக் கொலை

தெஹிவளை பொலிஸ் பிரிவில் உள்ள ஏ குவார்ட்டர்ஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில்...

இலங்கை மக்களுக்கு தமிழக நிவாரணம்

இலங்கையில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களை தமிழக அரசாங்கம் அனுப்பி...

“சௌமிய தான யாத்ரா” நிவாரண பணி களத்தில் செந்தில் தொண்டமான்

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தின் கிரிவாணகிட்டிய தோட்டத்தில் உள்ள...

இன்று வானிலை

வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வானிலை அவதான...