களத்தில் இறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி

Date:

அடுத்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி நாடு முழுவதும் பிரசாரக் கூட்டத் தொடரை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

ஜனவரி 19ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு பிரதான கூட்டமொன்றை நடாத்திய பின்னர் நாடு பூராகவும் கூட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

கட்சியின் உயர்பீடக் குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பிரதிநிதிகள் அடுத்த மாதம் நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய அமைப்பாளர் மற்றும் வாக்களிப்பு முகவர் நியமனத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கி பண்டார ஜனாதிபதிக்கு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஆறு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...