பாடகர் மாணிக்கவிநாயகம் காலமானார்

Date:

பிரபல பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் தனது 78 ஆவது அகவையில் நேற்று மாலை   இதய கோளாறு காரணமாக காலமானார்.


இதய கோளாறு காரணமாக சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு 
சிகிச்சை பெற்று வந்த மாணிக்க விநாயகம் வீட்டில் காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார். 


திருடா திருடி, சந்தோஷ் சுப்பிரமணியம், திமிரு, பேரழகன், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும.  நடித்துள்ளார்.

பருத்தி வீரன், வெயில், சந்திரமுகி, தூள் உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மயிலாடுதுறை அடுத்த வழுவூர் கிராமத்தை பூர்விகமாகக் கொண்டவர். பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையாவின் மகனாவார்.


இதேநேரம் ஈழத் தமிழர்களின் நெஞ்சம்கொண்ட பாடலான விடை கொடு எங்கள் நாடேகடல் வாசல் தெளிக்கும் வீடேபனை மர காடே, பறவைகள் கூடேமறுமுறை ஒரு முறை பார்போமா என்னும் பாடலைப் பாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...