புதிய எம்.பிக்கான வாகனங்கள் இதுவரை ஒதுக்கப்படவில்லை – ஆனந்த விஜேபால

Date:

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்கள் ஒதுக்கப்படவில்லை. தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தற்போது பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

புதிய பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு நாங்கள் தீர்மானம் எடுத்துள்ளோம். எனினும், அவர்களுக்கு வாகனங்களை எப்போது ஒதுக்குவது என்பது குறித்து நாங்கள் முடிவு செய்யவில்லை. அவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள வாகனங்களையும் இறக்குமதி செய்யமாட்டோம்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளை குறைக்க புதிய அரசு முடிவு செய்துள்ளது. வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...