சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும்!

Date:

சிறைச்சாலைகளில் தடுப்புக்காவலில் உள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துடன் நான் உடன்படுகின்றேன். காணி விவகாரமும், அரசியல் கைதிகள் விடயமும் அவற்றில் முக்கியம் பெறுகின்றன.

சிறைகளில் தற்போது தமிழ் அரசியல் கைதிகள் 31 பேர் உள்ளனர் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 15 பேரையும் பாதிக்கப்பட்ட தரப்புக்களுடன் பேசி பொதுமன்னிப்பில் ஜனாதிபதியால் விரைவாக விடுவிக்க முடியும்.

குற்றஞ்சாட்ட ஏனைய 16 பேர் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களையும் ஏதோவொரு வழியில் விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நாம் எந்த எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்த மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸதெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...

தங்கம் விலை மீண்டும் உயர்வு

இலங்கையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை (24)  விலையுடன் ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை(25) நிலவரப்படி...

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி இலஞ்சம்...

ஊர்காவற்றுறை பிரதேச சபை வரவு செலவு திட்டம் தோல்வி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்றுறை பிரதேச சபை...