தமிழரசின் பேச்சாளராகத் தொடர்ந்தும் சுமந்திரன் – பதில் தலைவர் சி.வி.கே. அறிவிப்பு

Date:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளராகத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என்று கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவின் பேச்சாளராக  நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனை நியமித்துள்ளமையால் அவர் நாடாளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிப்பார்.

எனினும், தமிழரசுக் கட்சியினுடைய ஊடகப் பேச்சாளராகத் தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார்.” – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

துசித ஹல்லோலுவ கைது

தேசிய லாட்டரி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், முன்னாள் ஜனாதிபதி ரணில்...

மலேசிய பிரதமர் அலுவலக இணை அமைச்சருடன் இ.தொ.கா தலைவர் சந்திப்பு!

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், மலேசிய பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர்...

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...