“காணாமல் ஆக்கப்பட்டோருக்குஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா”- வவுனியாவில் உறவுகள் கவனவீர்ப்புப் போராட்டம்

Date:

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா எனத் தெரிவித்து இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது, “காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே, இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?, ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா, 15 வருடங்களாகப் போராடும் எமக்கு விடிவு இல்லையா?” எனப் பல்வேறு கோஷங்களைப் போராட்டக்காரர்கள் எழுப்பியதுடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. அமர்வில் எமக்கான நீதியைப் பெற்றுத் தர ஐ.நா. வலியுறுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்துக்கு  நீதி கிடைக்க வேண்டும்.” – என்றனர்.

இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...