சஜித் சரியானவர் – சுதந்திர கட்சி ஆதரவு

Date:

பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருத்தமானவர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மாற்று அரசாங்கமாக கருதப்படுவதால் அவருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று விசேட கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அழைப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அவசர கடிதம்…!

​பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் கணேஸ்குமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில்...

திட்வா சூறாவளி உதவி நிதி பாதுகாப்பாக உள்ளது

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கிடைத்த நிதியுதவிகள் அரசுக் கருவூலத்தில்...

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8...