20ஆம் திகதி தனி விமானத்தில் இலங்கை வருகிறார் கோட்டாபய ராஜபக்ஷ

Date:

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தாய்லாந்தில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் அன்றைய தினம் அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ள கோட்டாபய அவரது ஹோட்டல் அறையை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதேவேளை, கடந்த மாதம் முதல் கோட்டாபயவின் பயணங்களுக்கு பிரத்தியேக ஜெட் விமானங்கள் யார் கொடுத்தார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், சட்டத்தரணிகள் குழுவொன்று அரசாங்கத்திடம் எதிர்காலத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...