கட்சித் தலைவர்களுக்கு பாராளுமன்றில் விசேட கூட்டம்

Date:

நாடாளுமன்றத்தின் எதிர்கால பணிகள் குறித்து முடிவு செய்வதற்காக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் சிறப்புக் கூட்டம் நாளை (24ம் திகதி) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமகி ஜன பலவேகய கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த நான்கு மாதங்களுக்கான செலவினங்களுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (இடைக்கால வரவு செலவுத் திட்டம்) மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இம்மாதம் 30, 31 மற்றும் 1ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் 2ம் திகதி வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த 9ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...