Tuesday, September 24, 2024

Latest Posts

புதிய கட்டண முறையால் மூடப்படும் 400 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்

பெற்றோல் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதில் பெற்றோலிய கூட்டுத்தாபனம்  அறிமுகப்படுத்தியுள்ள புதிய முறைமையினால் நாளாந்தம் 400க்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய முறையின்படி எரிபொருளை பெறுவதற்கு எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் உரிய தொகையை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு முன்னர் செலுத்த வேண்டும்.

அந்தக் காலத்திற்கு முன்னர் பணம் செலுத்தத் தவறினால், மறுநாள் எரிபொருள் கூடத்தின் உரிமையாளர்களுக்கு எரிபொருள் விடுவிக்கப்படாது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு போதிய அளவு எரிபொருள் விநியோகிக்கப்படாமையால் ஒரே நேரத்தில் பெருந்தொகையை வசூலிக்க முடியாது என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, புதிய முறைப்படி, எரிபொருள் பெறுவதற்கு முன், அனைத்து பணத்தையும் செலுத்துவது, பல நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு கடினமான பணியாக உள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.