வன்முறைகளுக்கு அடக்குமுறை ஒன்றே சரியான தீர்வு

0
25

கோட்டாபய ராஜபக்ஷ வன்முறைக்கு எதிரான சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை மாறியிருக்கும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அவர்கள் இப்போது அடக்குமுறை பற்றி பேசுகிறார்கள். வீடு எரிந்தால், அந்த நபரை கைது செய்ய வேண்டும், தெருவில் ஒருவர் கொல்லப்பட்டால், அவர்கள் மீது சட்டத்தை செயல்படுத்தவில்லை என்றால், அவர்களுக்கு எதிராக சட்டம் செயல்படுத்தப்படாவிட்டால், எங்கள் அன்பு பெற்றோர்களே, சகோதர சகோதரிகளே, நாங்கள் ஒருபோதும் முன்னேற மாட்டோம்.

இந்த நாட்டில் ஒழுக்கத்தை நிலைநாட்ட முடியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதைச் செய்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன், ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை.

வன்முறையை முன்னெடுப்பவர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வன்முறையைப் பரப்புபவர்களுக்கு எதிராக ஜனாதிபதி கோட்டாபய சட்டத்தை அமுல்படுத்தியிருந்தால் இன்று நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

ஆனால் அந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் நிறைவேற்றி வருகின்றமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. எனக்கு போராட்டத்தால் பிரச்சனை இல்லை, ஆனால் அந்த போராட்டக்காரருக்கும், போராட்டத்தை வழிநடத்திய அமைப்புக்கும் தான் பிரச்சனை.

இன்றைய வன்முறைக்கு ஒரே தீர்வு அடக்குமுறைதான் என நாமல் ராஜபக்ஷ நேற்று (10) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here